close
Choose your channels

கொரோனாவில் இருந்து மீண்ட விஜய் பட நாயகி: 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக தகவல்

Sunday, August 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தாலும் இன்னொரு பக்கம் கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஏற்கனவே திரையுலகினர் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையில் தற்போது விஜய் பட நாயகியும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது மீண்டு வந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ’சந்தோஷ் சுப்பிரமணியம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிலியா, இவர் தளபதி விஜய்யுடன் ’வேலாயுதம்’ மற்றும் ’சச்சின்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து தான் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கடவுளின் அருளால் தற்போது நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது அவர் கூறியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான போர் என்பது தனக்கு மிக எளிதாக இருந்ததாகவும், 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதால் தனது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களை சந்திக்க முடியவில்லை என்பதை தவிர மற்றபடி டிஜிட்டல் பொழுதுபோக்கு தனது தனிமையை போக்கி மகிழ்ச்சியாக வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு, மீண்டும் குடும்பத்துடன் இணைந்து உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஜெனிலியா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.