close
Choose your channels

179 நாடுகள், 10 ஆயிரம் விண்ணப்பங்கள்: சாதனை செய்த இந்திய நடிகை

Saturday, February 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுவதுண்டு. அந்த வகையில் 2019ஆம் ஆண்டுக்கான குளோபல் ஆசிரியர் பரிசை பெறும் போட்டி தற்போது நடந்து வருகிறது

இதில் உலகெங்கிலும் உள்ள 179 நாடுகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. இதில் தற்போது இந்த பரிசை வெல்வதற்கான பத்து பேர் பட்டியல் ஒன்று தயாராகியுள்ளது

இந்த பட்டியலில் இந்திய நடிகை ஸ்வரூப் 8வது இடத்தில் உள்ளார். குஜராத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர், இந்தியாவின் பல பள்ளிகளில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 1981ஆம் ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வரும் இவர் தற்போது 'தி சர்ஜிகல் ஸ்டிரைக்' என்ற படத்தில் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.