close
Choose your channels

நாற்பதிலும் வெற்றி பெற ரஜினியை துணைக்கு அழைக்கும் கமல்!

Monday, February 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ள கமல்ஹாசன், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற ரஜினி போன்ற நல்லவர் துணை தேவை என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ள கமல்ஹாசன், பெரிய கட்சிகள் கூட துணிந்து எடுக்காத தனித்து போட்டி என்ற முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில் கமலின் கட்சி ஒருவருடம் நிறைவடைந்ததற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் ' கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...என்று கூறியுள்ளார்.

ரஜினியின் வாழ்த்துக்கு நன்றி கூறிய கமல், "என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை  நின்றால் நாற்பது எளிதே நாளை நமதே" என்று தெரிவித்துள்ளார்.

கமலின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ரஜினி வரும் தேர்தலில் ஆதரவு தெரிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.