close
Choose your channels

நேசமணி மட்டும் மஞ்சள் டர்பனை அணிந்திருந்தால்... ஹர்பஜன்சிங் டுவீட்

Thursday, May 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு சிவில் இஞ்சினியர் தனது டுவிட்டர் பக்கத்தில் விளையாட்டாக ஆரம்பித்து வைத்த 'நேசமணி' டிரண்ட் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. நெட்டிசன்கள் தங்கள் கற்பனைத்திறனை வைத்து நூற்றுக்கணக்கான நேசமணி மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். வடிவேலுவின் கேரக்டரான நேசமணியும் அவர் மீது விழுந்த சுத்தியலும் உலக அளவில் புகழ் பெற்று வருகிறது.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளின்போது தமிழில் டுவீட் போட்டு தமிழர்களின் ஆதரவை பெற்று வந்த ஹர்பஜன்சிங்கையும் இந்த நேசமணி விட்டுவைக்கவில்லை. இதுகுறித்து அவர் பதிவு செய்த டுவீட்டில் கூறியிருப்பதாவது:

என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani என்று பதிவு செய்து வடிவேலு மஞ்சள் நிற டர்பன் கட்டிய ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த நேசமணி விவகாரம் எங்கு போய் முடிய போகிறதோ தெரியவில்லை

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.