close
Choose your channels

பிரபல ஹிந்தி நடிகர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி....!

Thursday, July 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹிந்தி நடிகர் திலீப் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹிந்தி சினிமாவில் மூத்த நடிகரான திலீப் குமார், கடந்த 1944-ஆம் ஆண்டில் "ஸ்வார்" என்ற படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அக்காலத்தில் பிரபல நடிகராகவும், முன்னணி நடிகராகவும் இருந்தவர், தமிழ் மொழியில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். தாதாசாகேப் பால்கே விருது, மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன், சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். 1998-ல் தான் தனது கடைசி படத்தில் நடித்திருந்தார். உடல்நல குறைபாட்டால் நடிப்பதை நிறுத்தியவர் ஓய்வு பெற்று வந்துள்ளார்.

98 வயதுடைய திலீப் குமாருக்கு திடீரென மூச்சுத்திணறல் பிரச்சனை ஏற்பட, அவர் தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் உடல்நிலை சரியாக இருப்பதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.