close
Choose your channels

ஒரு அப்பாவாக பெருமிதம் அடைகிறேன்: மகன் செயலால் நெகிழ்ச்சி அடைந்த அருண்விஜய்

Monday, May 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ படத்திற்கு பின்னர் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய், சமீபத்தில் ’மாபியா’ என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் ஒரே நேரத்தில் மூன்று திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் லாக்டவுன் முடிந்த பின்னர் தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும்போது ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக முழங்காலில் காயம் ஏற்பட்டு தற்போது அருண்விஜய் ஓய்வு எடுத்து வருகிறார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகிய செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அவர் தனது மகனின் செயலை கண்டு நெகிழ்ச்சி அடைந்த ஒரு நிகழ்வை குறிப்பிட்டு அது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். தன்னுடைய மகன் அர்னவ், சமீபத்தில் பசியுடன் இருக்கும் அம்மா நாய்க்கு உணவிட வேண்டும் என்றும் ஏனென்றால் அதற்கு குட்டிகள் இருக்கிறது என்றும் கூறினாராம். அதுமட்டுமின்றி உடனடியாக குட்டிகளுடன் இருந்த தெருநாய்க்கு தனது மகன் சாப்பாடு போட்டதாகவும் இதனையடுத்து அந்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு குட்டிகளுக்கு அந்த நாய் பால் கொடுத்ததையும் புகைப்படத்தில் பதிவு செய்துள்ளார். எனது மகன் இரக்கமுள்ள குணமுடன் வளர்ந்து வருவதை பார்த்து ஒரு அப்பாவாக நான் பெருமை அடைகிறேன் என்றும் அருண்விஜய் அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.