close
Choose your channels

என்னிக்காவது ஒரு நாள் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவேன்: அட்லி

Sunday, September 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாக என்னுடைய படத்தை நான் முதல் பாகத்திலேயே முடித்துவிடும் வழக்கம் உடையவன் என்றும், ஆனால் இந்த ஒரு படத்தை மட்டும் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற எனக்கு எண்ணம் ஏற்பட்டுள்ளது என்றும் இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார்.

‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை அட்லி இயக்கியுள்ளார். இந்த நிலையில் ஷாருக்கான், நயன்தாரா நடித்த ’ஜவான்’ திரைப்படத்தை இயக்கிய அட்லி அந்த படத்தை சமீபத்தில் ரிலீஸ் செய்த நிலையில் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இயக்கிய ஐந்து படங்களும் ஹிட் ஆகியுள்ளதால் பிளாப் படம் கொடுக்காத இயக்குனர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டி அளித்த போது ’பொதுவாக என்னுடைய படங்கள் முதல் பாகத்திலேயே முடிந்துவிடும் வகையில் தான் கதையை தேர்ந்தெடுப்பேன். என்னுடைய படங்களை அடுத்த பாகத்தை எடுக்க நான் விரும்பவும் மாட்டேன்.

ஆனால் ஜவான் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை மட்டும் நான் எடுக்க விரும்புகிறேன். அதற்கான கதை கிடைத்தவுடன் என்றாவது ஒருநாள் ’ஜவான்’ இரண்டாவது பாகத்தை நான் கண்டிப்பாக இயக்குவேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

எனவே ’ஜவான்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.