close
Choose your channels

இளையராஜா 75 இசை நிகழ்ச்சி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Wednesday, January 30, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 'இளையராஜா 75' என்ற இசை நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை தமிழக கவர்னர் தொடங்கி வைக்க உள்ளதாகவும், மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது இந்த நிகழ்ச்சியை ஒத்தி வைக்க முடியுமா? என்பதற்கு பதிலளிக்குமாறு தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாகவும், அதே நேரத்தில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் நிகழ்ச்சியை நடத்த தடையில்லை என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனையடுத்து திட்டமிட்டபடி 'இளையராஜா 75' நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.