close
Choose your channels

திடீர் திருப்பம்: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது இவர்தானா?

Tuesday, December 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களாக அமைதியாக எதுவுமே செய்யாமல் விளையாடி வருபவர்கள் காப்பாற்றப்பட்டும், ஆர்ப்பாட்டமாக, ஆத்திரமாக விளையாடி வருபவர்கள் வெளியேற்றப்பட்டும் வருகின்றனர். அந்த வகையில் சம்யுக்தா, நிஷா, அர்ச்சனா ஆகியோர் சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் அனேகமாக நேற்று கோபப்பட்ட அனிதா வெளியேற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

நேற்று ஆரியின் மீது அனிதாவின் கோபம் அதிகபட்சமாக இருந்ததாகவும், இதனால் அனிதாவை இந்த வாரம் வெளியேற்ற பார்வையாளர்கள் முடிவு செய்து விட்டதாகவும் தெரிகிறது. நேற்று ஒரே நாளில் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் அனிதாவுக்கு மிகக்குறைவான ஓட்டுகள் தான் விழுந்து உள்ளது என்பதும், மிக அதிகமான ஓட்டுக்கள் ஆரிக்கு விழுந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

ஒரு வாரத்தில் நடைபெறும் ஒரே ஒரு சம்பவம்தான் அந்த வாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளே கோபப்பட்ட அனிதா பார்வையாளர்கள் மத்தியில் கெட்ட பெயரை வாங்கி விட்டதால் அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

நேற்றைய நிகழ்ச்சியில் ஷிவானியை சத்தம் போட்டு கத்த வேண்டாம், அவ்வாறு கத்தினால் தனக்கு அலர்ஜி என்று கூறிய அனிதா, அடுத்த சில நிமிடங்களிலேயே ஆரியை வீடே அதிரும்படி கத்தியது முரண்பாடுகளின் மொத்த உருவமாக அனிதா காணப்படுவதாகவும் பார்வையாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.