close
Choose your channels

ரஜினியிடம் பேசியது என்ன? மதகுருமார்கள் பேட்டி

Sunday, March 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று இஸ்லாமிய மதகுருமார்கள் சந்தித்து பேசியதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ரஜினியிடம் பேசியது என்ன என்பது குறித்து இஸ்லாமிய அமைப்பின் காஜா முயீனுத்தீன் பாகவி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:

குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து ரஜினியிடம் தெளிவாக விளக்கினோம். சிஏஏ சட்டம் குறித்த எங்கள் நியாயங்களை ரஜினிகாந்த் புரிந்து கொண்டார். அச்சத்துடன் இருக்கும் போராட்டக்காரர்கள் மற்றும் மக்களை அமைதி ஏற்படுத்த எல்லா வகைகளிலும் சேர்ந்து செயல்பட முழுமையான பங்களிப்பு தருவேன் என்று ரஜினிகாந்த் எங்களிடம் கூறினார்.

மேலும் நாட்டில் அமைதியை ஏற்படுத்த என்னால் ஆன அனைத்து வகை முயற்சிகளையும் எடுப்பேன் என ரஜினிகாந்த் எங்களிடம் தெரிவித்துள்ளார். அவருக்கு நாங்கள் எங்களின் நன்றியை கூறினோம் என்று ரஜினிகாந்தை சந்தித்த பின் இஸ்லாமிய அமைப்பின் காஜா முயீனுத்தீன் பாகவி பேட்டி அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.