close
Choose your channels

'பலூன்' தயாரிப்பாளரின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறியுள்ள ஜெய்

Saturday, January 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ஜெய், அஞ்சலி நடித்த 'பலூன்' திரைப்படத்தின் இயக்குனர் சினிஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனம், ஜெய் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஜெய் குடித்து விட்டு படப்பிடிப்பிற்கு வந்ததாகவும், படப்பிடிப்புக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், ஜெய் தாமதமாக படப்பிடிப்புக்கு வந்ததால் தங்களுக்கு ரூ.1.5 கோடி வரை நஷ்டம் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தன்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு நடிகர் ஜெய் தற்போது பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது: என்மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை. என் மீதான தனிப்பட்ட தாக்குதலாகவே இதனை பார்க்க முடிகிறது.

சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு நான் வந்துள்ளேன், இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. என்னை வைத்து படம் தயாரித்த அனைவருக்கும் என்னை பற்றி நன்றாக தெரியும். இதுவரை எந்த தயாரிப்பாளரும் என்மீது புகார் கூறியதில்லை. 'பலூன்' திரைப்படம் இதுவரை ரூ.7 கோடி வசூல் செய்துள்ளது. எனவே இந்த படம் வசூல் ரீதியில் வெற்றிப்படம் தான். இவ்வாறு நடிகர் ஜெய் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.