close
Choose your channels

பிக்பாஸ் ஃபைனலுக்கு தகுதி பெற்ற போட்டியாளர்

Friday, September 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரத்தில் முடிவடையவுள்ள நிலையில் இன்றைய டாஸ்க் மூலம் இறுதி போட்டிக்கு செல்லும் ஒரு நபர் தேர்வு செய்யப்படுகிறார். இந்த போட்டியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு கோப்பையில் தண்ணீர் கொடுத்து சுற்றிவர வேண்டும். தண்ணீர் கொட்டமால் அதிக தண்ணீரை கோப்பையில் வைத்துள்ளவரே இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும்

அந்த வகையில் ஜனனி, யாஷிகா தவிர அனைவரும் வெளியேறிவிட இருவருக்கும் இடையே கடும்போட்டி நடக்கின்றது. கடைசியில் ஜனனி வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெற்றது போல் இன்றைய முதல் புரமோ முடிவடைகிறது.

நாம் ஏற்கனவே எதிர்பார்த்தது போல் ஜனனி, ரித்விகா, யாஷிகா மற்றும் விஜயலட்சுமி இறுதிபோட்டிக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இதில் ஜனனி அல்லது ரித்விகா டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.