close
Choose your channels

ஜெயம் ரவியின் அடுத்த மூன்று படங்கள் குறித்த தகவல்

Saturday, February 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் இளம் நாயகர்களில் ஒருவராகிய ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'டிக் டிக் டிக்' மற்றும் 'அடங்கமறு' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவர் தற்போது காஜல் அகர்வாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த மூன்று படங்களை ஸ்க்ரீன் சீன் என்ற நிறுவனம் தயாரிக்கவிருக்கின்றது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்த மூன்று படங்களில் நடிக்க தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஜெயம் ரவி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படங்கள் குறித்த தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'தனி ஒருவன் 2' திரைப்படமும் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.