close
Choose your channels

மீண்டும் தமிழில் ஒரு ஜோம்பி திரைப்படமா?

Monday, March 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'நாய்கள் ஜாக்கிரதை' இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமிமேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'மிருதன்' திரைப்படம் தமிழின் முதல் ஜோம்பி திரைப்படம் என்ற பெயருடன் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து மீண்டும் ஜெயம் ரவியுடன் இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இணையவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.


ஆம் சக்தி செளந்ந்திரராஜனின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை கெனன்யா மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் ஹீரோயின் உள்பட மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவலை ஜெயம் ரவி மற்றும் சக்தி செளந்திரராஜன் ஆகிய இருவருமே தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளதால் இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படம் 'மிருதன்' படத்தின் அடுத்த பாகமா? அல்லது வேறு கதையா? என்பது குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மீண்டும் தமிழில் ஒரு ஜோம்பி திரைப்படம் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.