close
Choose your channels

ஜோதிகாவுக்கு தமிழக அரசு வழங்கிய பெருமை மிகுந்த பதவி

Thursday, August 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பின்னர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் '36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி ஆன ஜோதிகா அதன்பின் ஒருசில படங்களில் நடித்து தற்போது பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நல்லெண்ண தூதுவராக ஜோதிகா மற்றும் விவேக் ஆகிய இருவரையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்துள்ளார்.

ஜோதிகா, விவேக் ஆகிய இருவரும் தமிழக மக்களுக்கு பிளாஸ்டிக் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். இந்த பெருமைமிகு பதவியை பெற்றுள்ள இருவருக்கும் கோலிவுட் திரையுலகினர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.