close
Choose your channels

ஜோதிகாவின் புதிய படத்தின் இயக்குனர் அறிவிப்பு

Tuesday, September 11, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் பெற்ற வெற்றியால் அதன்பின்னர் பாலாவின் 'நாச்சியார்' உள்பட ஒருசில திரைப்படங்களில் ஜோதிகா நடித்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்', 'ராதாமோகன் இயக்கத்தில் 'காற்றின் மொழி' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் ஜோதிகா நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் என்பவர் இயக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.