close
Choose your channels

திமுக பேரணியில் மக்கள் நீதிமய்யம்: கமல் எடுத்த திடீர் முடிவு!

Saturday, December 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக வரும் 23ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணிகள் முக ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பேரணியில் கலந்துகொள்ள சமீபத்தில் கமலஹாசன் அவர்களுக்கு திமுக சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. கமல்ஹாசன் அவர்களும் உடல்நிலை காரணமாக தான் இந்த பேரணியில் கலந்து கொள்ளாவிட்டாலும், தன்னுடைய கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று உறுதி அளித்ததாக செய்திகள் வெளியாகி வந்தது.

இந்த நிலையில் சற்று முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளாது என்றும் அதற்கான காரணத்தையும் நேரில் விளக்கியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் இந்த பேரணியில் கலந்துகொண்டு கூட்டணிக்கு அஸ்திவாரத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்த நிலையில் திடீரென கமல்ஹாசன் எடுத்துள்ள இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.