close
Choose your channels

எனக்கு ரூ.300 கோடி இழப்பு: கமல்ஹாசன் அதிர்ச்சி தகவல்

Tuesday, March 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனக்கு 300 கோடி ரூபாய் இழப்பு என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி முதல் முதலாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அவருக்கு பொதுமக்கள் இடையே ஏராளமான வரவேற்பு இருப்பதால் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, மத்திய அரசு என அனைத்தையும் கடுமையாக தாக்கி தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் கமலஹாசன் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘நான் நடிப்பு தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததால் எனக்கு 300 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்றும், தமிழக மக்களின் நலன் தான் எனக்கு முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஊழல் செய்தவர்கள் உள்ளே சென்றாலும் சிறையிலிருந்து ஷாப்பிங் போகிற அளவுக்கு நமது சட்டத்தில் ஓட்டைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசனின் இந்த தேர்தல் பிரச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.