close
Choose your channels

மகாகவி பாரதிக்கு கமல்ஹாசன் புகழாரம்

Sunday, December 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் கவிஞருமான மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 136வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாரதியாரின் கவிதைகளில் மிகுந்த பற்று கொண்ட கமல்ஹாசன், பாரதியாருக்கு தனது சமூக வலைத்தளத்தில் புகழாராம் சூட்டியுள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் 'எத்தனை பேரை எழுதவைத்தான் நம் பாரதி! அத்தனை கோடி நன்றி அவ்வாசானுக்கு. முன்னோர் தமிழை என்வரை கொண்டு சேர்த்தமைக்காகவும் கூட' என்று பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசன் நடித்த 'வறுமையின் நிறம் சிகப்பு' படத்தில் 'தீர்த்த கரைதன்னிலே', 'நல்லதோர் வீணை செய்தேன்' ஆகிய பாடல்கள் இடம்பெற்றது போல் பாரதி எழுதிய பல பாடல்கள் கமல்ஹாசன் படங்களில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.