close
Choose your channels

சினேகாவின் புரட்சிகரமான சாதனைக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

Thursday, February 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என பள்ளிகளில் பாடம் நடத்தினாலும் அந்த பள்ளியில் சேர்வதற்கு ஜாதி சான்றிதழ் கட்டாயம் தேவைப்படுகிறது. இந்த நிலையில் பெண் வழக்கறிஞர் ஒருவர் தான் 'சாதி மதமற்றவர்' என்ற சான்றிதழை பெற்று புரட்சிகரமான சாதனை செய்துள்ளர்.

தமிழகத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சினேகா, பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது சாதி, மதம் ஆகியவற்றை குறிப்பிடாமல் கல்வி பயின்றார். இந்த நிலையில் வழக்கறிஞர் பட்டம் பெற்றவுடன் தான் சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை வாங்க விரும்பினார். ஆனால் இதற்கு முன் இப்படி ஒரு சான்றிதழ் யாருக்கும் அளித்ததில்லை என்ற காரணத்தை காட்டி அவருக்கு 'சாதி மதமற்றவர்' என்ற சான்றிதழை தர அதிகாரிகள் மறுத்துள்ளனர். இந்த நிலையில் பலவருட சட்டப்போராட்டத்திற்கு பின் தற்போது அவர் 'சாதி மதமற்றவர்' என்ற சான்றிதழை பெற்றுள்ளார்.

இந்த புரட்சிகரமான சாதனையை செய்த சினேகாவிற்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுகுறித்து கூறியபோது, 'தமிழ் மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மதம் மாறுவதை விட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா, புது யுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம் பிடிப்போர்க்கும் இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே, நிச்சயம் நமதே!

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.