close
Choose your channels

சபரிமலை விவகாரம்: கமல்ஹாசான் கருத்து

Saturday, October 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சபரிமலை விவகாரம் குறித்து சற்றுமுன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தபோது, 'இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை தான் மதிப்பதாகவும் அதே நேரத்தில் ஐதீகத்தையும் பின்பற்ற வேண்டும் என்றும் காலம் காலமாக உள்ள சம்பிரதாயத்தை மாற்றுவது முறையானது அல்ல என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சபரிமலை குறித்து கூறியபோது, 'சபரிமலை விவகாரத்தில் என்னை கருத்துக் கேட்பது சரியாக இருக்காது. எனக்கு தெரியாத விஷயத்தில் நான் கருத்து தெரிவிப்பது இல்லை' என்று கூறியுள்ளார்.

மேலும் சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் மதிக்கவில்லை. சபரிமலைக்கு நான் செல்லாததால் அவர்கள் உணர்வு குறித்து என்னால் கருத்து கூற முடியாது என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.