close
Choose your channels

அஜீத் பிரச்சனை குறித்து கமிஷனரிடம் புகார். கருணாஸ்

Wednesday, October 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகர் கருணாஸ், அஜீத் குறித்து அவதூறாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததாக நேற்று பரபரப்பான செய்திகள் வெளிவந்தது. இதுகுறித்து பத்திரிகைகளுக்கு விளக்க அறிக்கை ஒன்றினை கருணாஸ் அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, "என்னுடைய டுவிட்டர் கணக்கில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறாக செய்திகளை கூறியதாக இன்று செய்தி வெளிவந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.

யாரோ விஷமிகள் என்னுடைய ட்விட்டர் கணக்கில் இப்படி ஒரு தவறான முறையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். ஆரம்ப காலகட்டம் முதல் இன்று வரை நான் அனைத்து நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி வந்து கொண்டிருக்கின்றேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்ததை அறியும்போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இதுபற்றி நாளை கமிஷனரிடம் முறையாக புகார் அளிக்கவுள்ளேன்.

என்னை பற்றிய தவறான செய்திகளை கேள்விபடும்போது அந்த செய்தியை பிரசுரிக்கும் முன் எனக்கு தெரியபடுத்துமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' இவ்வாறு கருணாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.