close
Choose your channels

மொபைல் இல்லை, டிவி இல்லை: கஸ்தூரியின் பிக்பாஸ் பிரதேசம் இதுதான்!

Sunday, June 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மொபைல் இல்லை, டிவி இல்லை, எந்த வித தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் ஒரு ஸ்டார் ஓட்டல் போன்ற ஒரு சிறையில் இருக்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் இன்று இரவு தொடங்கவுள்ள நிலையில் நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மொபைல் இல்லை, டிவி இல்லை, எந்த வித தொடர்பும் இல்லாமல் ஒரு தனி உலகில் இருக்கின்றேன். இயற்கையின் அருமையான பிரதேசத்தில், சுத்தமான, யாரும் இடைஞ்சல் தரமுடியாத ஒரு இடத்தில் இருக்கின்றேன். அதுதான் மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு பகுதி. இது ஒரு பிக்பாஸ் பிரதேசம் இல்லை. இதுவொரு அருமையான சுற்றுலா பிரதேசம் என்று புகைப்படங்களுடன் கூடிய ஒரு டுவீட்டை நடிகை கஸ்தூரி பதிவு செய்துள்ளார்.

சென்னையில் நடிகர் சங்க தேர்தல் பரபரப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த தேர்தல் குறித்து அவ்வப்போது தனது கருத்தை தெரிவித்த கஸ்தூரி, தேர்தலில் வாக்களிக்காமல் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.