close
Choose your channels

தொழிலதிபரான மகளுக்கு வாழ்த்து தெரிவித்த குஷ்பு

Wednesday, February 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி போன்றவற்றில் குஷ்புவும், அவரது கணவர் சுந்தர் சி திரைப்படங்கள் இயக்குவதிலும் பிசியாக இருந்து வரும் நிலையில் சுந்தர் சி-குஷ்பு தம்பதியின் மூத்த மகள் அனந்திட்டா தற்போது தொழிலதிபர் ஆகியுள்ளார்.

16 வயதே குஷ்புவின் மகள் அனந்திட்டா, தனது தோழி ஜைனா பாஸல் என்பவருடன் இணைந்து, இணையத்தில் அழகு சாதன பொருட்களை விற்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். மகளின் இந்த முயற்சிக்கு நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெருமைக்குரியவராகவும், தனித்தன்மையுடன் இருக்கும் தனது மகளுக்கு தற்போது இறக்கை முளைத்துவிட்டதால் பறக்க ஆரம்பித்துவிட்டதாகவும், அவர் என்னவாக விரும்புகிறாரோ அந்த விருப்பத்திற்கு பெற்றோர்களாகிய நாங்கள் முழு ஆதரவு கொடுப்போம் என்றும் பாராட்டியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.