close
Choose your channels

தமிழக முதல்வருடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு: என்ன காரணம்?

Saturday, November 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள் நேற்று மாலை சந்தித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும் குழந்தைகள் பாதுகாப்புக்காக முதல்வருடன் அவர் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.

முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினி, ‘குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் குழந்தைகள் பாதுகாப்பில் தமிழகம் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றும், குழந்தைகளுக்காக ஒரு தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் தான் முதல்வரிடம் தெரிவித்ததாகவும், குழந்தைகளுக்கான தனி அமைப்புக்கு முதல்வர் ஒப்புக்கொள்வார் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும் குழந்தைகளுக்கான அமைப்பில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட பலரும் இடம் பெற வேண்டும் என்றும், சுஜித் சம்பவம் மட்டுமின்றி குழந்தைகளுக்கு பல்வேறு விதமான பாதுகாப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது வீட்டில் அளித்த பேட்டியின்போது தமிழகத்தில் ஆளுமையுள்ள சரியான தலைவருக்கான வெற்றிடம் உள்ளது என்று கூறினார். இந்த கருத்தை அவர் கூறிய அடுத்தத சிலமணி நேரங்களில் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் முதல்வரை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.