close
Choose your channels

'லியோ' திரைப்படம் திரையிடப்படவில்லை: சென்னையின் முக்கிய திரையரங்கம் அறிவிப்பு..!

Wednesday, October 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’லியோ’ திரைப்படம் எங்கள் திரையரங்கில் திரையிடப்படவில்லை என்றும் எனவே ரசிகர்கள் முன்பதிவுக்காக கவுண்டரில் காத்திருக்க வேண்டாம் என்றும் சென்னையின் முக்கிய திரையரங்கம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இன்று கூட இன்னும் சில திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கவில்லை. திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பு தரப்பு இடையே பங்கீடு பகிர்வது குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையின் முக்கிய திரையரங்குகளில் ஒன்றான ரோகிணி திரையரங்கில் ’லியோ’ படத்திற்கு முன்பதிவு செய்ய ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளது. அதில் ’லியோ’ திரைப்படத்திற்கு தற்போது முன்பதிவு கிடையாது, முன்பதிவு குறித்த விவரங்கள் இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும், ரசிகர்கள் யாரும் கவுண்டரில் காத்திருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இன்னொரு அறிவிப்பு பலகையில் ’லியோ’ திரைப்படம் திரையிடப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. தயாரிப்பு தரப்பு மற்றும் தியேட்டர் பங்கீடு குறித்த சிக்கல் இருப்பதால் இன்னமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் இருப்பினும் விரைவில் இதற்கான முடிவு எட்டப்பட்டு நாளை காலை 9 மணி காட்சி திரையிடப்படலாம் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.