close
Choose your channels

புரட்சி வரிகளுடன் பரபரப்பை ஏற்படுத்திய 'மதுரவீரன்' சிங்கிள் பாடல்

Saturday, November 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்து வரும் 'மதுரவீரன்' படத்தின் சிங்கிள் பாடல் இன்று காலை வெளிவந்து பட்டையை கிளப்பி வருகிறது. சமூக அவலங்களை தோலுரிக்கும் வகையில் கவிஞர் யுகபாரதி எழுதிய இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். 

'என்ன நடக்குது நாட்டுல' என்று தொடங்கும் இந்த பாடலில் 

கொள்ளை அடிச்சவன் கூட்டுல,
நம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல. 
எதையும் நாம பாக்காம எதுத்து கேள்வி கேக்காம ,
அடங்கி ஒடுங்கி கிடப்பதால ஆளுக்காளு நாட்டாம

போன்ற புரட்சிகரமான வரிகள் அமைந்துள்ளது.

P.G.முத்தையா ஒளிப்பதிவு செய்து இயக்கி வரும் இந்த படத்தை V ஸ்டுடியோஸ் மற்றும் P.G மீடியா வொர்க்ஸ் தயாரித்து வருகிறது. சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் மீனாட்சி, வேலராமமூர்த்தி, பாலசரவணன், மிமிகோபி, ஜி.மாரிமுத்து, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.