close
Choose your channels

மீண்டும் இணைந்த தனுஷ்-மாளவிகா மோகனன்!

Thursday, October 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்துவரும் ’மாறன்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் தொடங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் தனுஷூடன் மாளவிகா மோகனன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மாறன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இடையில் தனுஷ், ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக குற்றாலம் சென்று விட்டார். இதனை அடுத்து ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இதனையடுத்து தற்போது மீண்டும் தனுஷ் ‘மாறன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அதேபோல் மாளவிகா மோகனன் ரன்பீர் கபூருடன் இந்தி படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் மீண்டும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் இதனை அடுத்து செல்வராகவன் இயக்கும் ’நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

தனுஷ், மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், கிருஷ்ணகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பதும் விவேக் பாடல்கள் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.