close
Choose your channels

மனைவியுடன் பைக்கில் சென்ற இளம் இயக்குனர் பலி! திரையுலகினர் அதிர்ச்சி

Tuesday, January 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மனைவியுடன் பைக்கில் சென்ற 30 வயது இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பாபநாசம், தம்பி ஆகிய தமிழ் திரைப்படங்களையும் பல மலையாளப் படங்களை இயக்கியவர் ஜித்துஜோசப். இவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விவேக் ஆரியன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'ஒருமையில் ஒரு சிஸ்ரம்’ என்ற படத்தை இயக்கினார்.

இந்த நிலையில் தனது மனைவி அமிர்தாவுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பைக்கில் விவேக் ஆர்யன் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இந்த விபத்தில் விவேக் ஆர்யன் மற்றும் அவரது மனைவி அமிர்தா ஆகிய இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று விவேக் ஆரியன் மரணமடைந்தார். அவரது மறைவு அவரது குடும்பத்தாரையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos