close
Choose your channels

வைரமுத்து மீது மலேசியா வாசுதேவன் மருமகள் கூறிய 'மீடூ' புகார்

Wednesday, October 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகாரை அடுத்து வேறு சில பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக கூறி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களின் மருமகளும் ஒரு மீடூ' புகாரை தெரிவித்துள்ளார். தான் ஒரு மியூசிக் சேனலில் பணிபுரிந்தபோது ஒரு இளம்பெண்ணை பாலியல் தொல்லை கொடுக்க வைரமுத்து முயன்றதாக திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

மேலும் சின்மயி கூறிய புகாரை அடுத்து திரையுலகினர்களும் மற்றவர்களும் வைரமுத்துவை நோக்கி கேள்வி எழுப்பாமல் ஏன் பத்து வருடம் அமைதியாக இருந்ததாக சின்மயியை நோக்கி கேள்வி எழுப்புவது ஏன்? என்று தெரியவில்லை என்றும் மலேசியா வாசுதேவனின் மருமகள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். வைரமுத்து மீது புகார்கள் நீண்டுகொண்டே போவதும், இதற்கு வைரமுத்து விளக்கமளிக்காமல் மெளனமாக இருப்பதும் அவர் மீதான சந்தேகத்தை அதிகரிப்பதாக தெரிகிறது என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.