close
Choose your channels

செக்க சிவந்த வானம்: முதல் நாளில் செய்த அபார வசூல்

Friday, September 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு மற்றும் அருண்விஜய் என நான்கு முன்னணி நடிகர்கள் நடித்த 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிகாலை ஐந்து மணி காட்சி முடிந்தவுடனே சமூக வலைத்தளங்களில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததால் அடுத்தடுத்த காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. முதல் நாளில் தமிழகத்தில் இந்த படம் ரூ.7,4 கோடி வசூலித்துள்ளது. இந்த ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'காலா' மற்றும் சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' ஆகிய இரண்டு படங்களை அடுத்து மூன்றாவது முதல் நாள் அதிக வசூல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

'செக்க சிவந்த வானம்' திரைப்படம் முதல் நாளில் சென்னையில் ரூ.89 லட்சமும், செங்கல்பட்டில் ரூ.2.1 கோடியும், கோவையில் ரூ.1.02 கோடியும் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் இந்த படம் மிகப்பெரிய வசூல் செய்து ஓப்பனிங் வசூலில் ஒரு புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.