close
Choose your channels

சென்னை வெள்ளத்தில் சிக்கிய இயக்குனர் மகேந்திரன். போலீஸார் மீட்பு

Tuesday, December 8, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும், தகவல் தொடர்பு இன்றியும் பெரும் அவதிப்பட்டனர். இந்த சிக்கலில் திரைப்பட நட்சத்திரங்களும் தப்பவில்லை.

இந்நிலையில் பிரபல இயக்குனரும், விஜய்யின் 59வது படமான 'தெறி' படத்தின் வில்லனுமான மகேந்திரன் அவர்கள் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வெள்ளத்தால் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் உள்ள இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சென்னை போலீஸார் மகேந்திரனின் வீட்டிற்கு சென்று அவர் பத்திரமாக இருப்பதை உறுதி செய்ததோடு அவர்கள் இருவரையும் புகைப்படம் எடுத்து அவரது மகனுக்கு வாட்ஸ் மூலம் தகவல் அனுப்பினர். மேலும் இயக்குனர் மகேந்திரனுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் போலீஸார் உதவி செய்தனர். இதனால் மகேந்திரன் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.