close
Choose your channels

மணிரத்னம் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

Saturday, June 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில், அவர் தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் பிசியாக உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் மணிரத்னம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் விக்ரம் பிரபு நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை அவருடைய உதவியாளர் தனா இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 15ஆம் தேதி தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் எழுதிய கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கும் தனா, இந்த படத்திற்கு 'வானம் கொட்டட்டும்' என்ற டைட்டிலை வைத்துள்ளார். விக்ரம்பிரபு ஜோடியாக மடோனா செபாஸ்டின், தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள இந்த படத்தில் 20 வருடங்கள் கழித்து மீண்டும் சரத்குமார்-ராதிகா ஜோடியாக இந்த படத்தில் விக்ரம்பிரபுவின் பெற்றோர்களாக நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையில் ப்ரீதா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.