close
Choose your channels

குற்றப்பரம்பரை படத்திற்கு தயாராகிறார் பாலா

Monday, January 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் 'குற்றப்பரம்பரை' கதையை படமாக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த படம் தள்ளிப்போய்க்கொண்டே வந்த நிலையில் தற்போது அதே கதையை படமாக்க இயக்குனர் பாலா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அரவிந்த்சாமி ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும், மேலும் ஒரு முக்கிய பாத்திரத்தில் மனிஷா கொய்ராலா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அனுஷ்கா தற்போது பாகுபலி மற்றும் 'S3' படங்களில் பிசியாக இருப்பதால் இந்த படத்தில் நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் 1871ஆம் ஆண்டு இந்தியாவில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான சட்டமாக இருந்தது. இந்த சட்டம் தமிழகத்திற்கு 1911ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

எந்த ஒரு சிறு விஷயத்தைகூட அழுத்தமாக படக்காட்சிகளால் விவரிக்கும் இயக்குனர் பாலா, குற்றப்பரம்பரை கதையை கையில் எடுத்துள்ளதால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.