close
Choose your channels

மாயா, பூர்ணிமா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே பிளேயர் தான்: முகத்திரையை கிழித்த விஷ்ணு..!

Tuesday, January 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்கில் ஒரு போட்டியாளர் தனது சக போட்டியாளர் ஒருவரை அழைத்து அவரது 93 நாள் பயணம் குறித்தும் அவரது நல்லது கெட்டது குறித்தும் பேச வேண்டும் என்று கூறப்பட்டது.

பூர்ணிமா, விஷ்ணு குறித்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினார் என்பதையும், விஷ்ணு மீது அபாண்டமாக பல கற்பனையான பழிகளை தூக்கி போட்டார் என்பதை 24 மணி நேர நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இதன் பின்னர் பூர்ணிமா குறித்து விஷ்ணு பேச வந்த போது அவர் ’ஒரு பிளேயரை தூண்டி விட்டு அவர்களை எலிமினேஷன் செய்ய வைப்பது ஒரு கேம், அவர்களது எமோஷனலை தூண்டிவிடுவது ஒரு கேம், இதில் என்னையும் பலியாடு ஆக்க முயற்சி செய்வது என்று அவர் கூறிய போது மாயா குறுக்கிட்டு, ‘இது என்னை பற்றியா? அல்லது பூர்ணிமா பற்றியா? என கேட்க அதற்கு விஷ்ணு ’இங்கே ஒரே பிளேயர் தான், மாயா பூர்ணிமா ஆகிய இருவரும் ஒரே பிளேயர் தான் என்று பதிலடி கொடுத்தார். மேலும் விஷ்ணு பேசும்போது மாயா அதை கிண்டல் செய்யும் வகையில் முகபாவணையை செய்தது பார்வையாளர்களுக்கு பெரும் அருவருப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக மாயா, அர்ச்சனா குறித்து பேசியபோது அர்ச்சனா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். அதே போல் தினேஷ் குறித்து விசித்ரா பேசியபோது, ‘நேரடியாக என்னை தினேஷ் அட்டாக் செய்தார் என்றும் அசிங்கமாக என்னுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார் என்பது என்னுடைய எண்ணம் என்று கூறிய போது தினேஷும் அமைதியாக இருந்தார்.

ஆனால் விஷ்ணு பேசியபோது மட்டும் மாயா தனது முகபாவனைகளை கோணலாக வைத்துக்கொண்டு அவரை மட்டுமின்றி பார்வையாளர்களை இரிடேட் செய்தும் வகையில் செய்தது பார்வையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.