close
Choose your channels

'இன்று நேற்று நாளை 2' படத்தின் நாயகி யார்? 

Thursday, July 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் முதல் 'டைம் டிராவல்' திரைப்படமான 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய ரவிகுமாரின் உதவியாளர் கார்த்திக் இயக்கவுள்ளார். மேலும் முதல் பாக நாயகன் விஷ்ணுவிஷால் சமீபத்தில் இந்த படத்திற்கும் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியும் முதல் பாகத்தில் நடித்த நடிகை மியா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சிவி குமார் கூறியபோது, 'முதல் பாகத்தில் நடித்த வில்லன் கேரக்டர் அந்த படத்தில் இறந்துவிட்டதால் அவரை தவிர அனைவரையும் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறோம். அந்த வகையில் மியாவும் இதில் நடிக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். இருப்பினும் மியா தான் நாயகி என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறினார்.

விஷ்ணுவிஷால், கருணாகரன் நடிக்கவுள்ள இந்த படம் ஜிப்ரான் இசையில் தினேஷ்குமார் ஒளிப்பதிவில் உருவாகவுள்ளது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் டைம் டிராவல் படமாக இருந்தாலும் இதில் வித்தியாசமான கதை இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.