close
Choose your channels

கமல் கட்சியில் இருந்து விலகிய இன்னொரு பிரமுகர்: இம்முறை யார் தெரியுமா?

Wednesday, May 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணியை அடுத்து மூன்றாவது கூட்டணியாக போட்டியிட்டது. இந்த கூட்டணி ஓரளவு வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமல்ஹாசன் உள்பட அந்த கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர் என்பதும், பெரும்பாலானோர் டெபாசிட் இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தல் முடிந்தவுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலகத் தொடங்கினர். முதலில் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் அதன்பின் சந்தோஷ் பாபு, பத்மபிரியா உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகினார்கள்.

இந்தநிலையில் மேலும் சிலர் விலக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் முருகானந்தம் அறிவித்துள்ளார். இதனால் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.