close
Choose your channels

'தெறி'யை அடுத்து பஸ்ஸில் பிடிபட்ட 'மனிதன்'

Tuesday, May 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் சட்டவிரோதமாக பேருந்தில் ஒளிப்பரப்பாகியதை விஜய் ரசிகர் ஒருவர் கொடுத்த தகவலின்படியும், விஷாலின் அதிரடி நடவடிக்கையாலும் அந்த பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார் என்பதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம்.


இந்நிலையில் 'தெறி'யை அடுத்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த மற்றொரு தனியார் பேருந்து ஒன்றில் உதயநிதி ஸ்டாலினின் 'மனிதன்' திரைப்படம் ஓடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் வீடியோ பைரஸி காவல் கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி உத்தரவின்படி, காவல்துறை ஆய்வாளர்கள் மகேந்திரன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் இன்று காலை மதுரவாயல் பகுதியில் பஸ்ஸை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ஒருசில நாட்கள் இடைவெளியில் இரண்டு பேருந்துகள் திருட்டி விசிடி குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக இனிமேல் பஸ்ஸில் புதுப்படம் ஒளிபரப்புவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.