close
Choose your channels

சமந்தாவின் நாய்க்கு நன்றி சொன்ன நாக சைதன்யா!

Monday, July 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமந்தாவை விவாகரத்து செய்வதாக நாகசைதன்யா அறிவித்த போதிலும் சமந்தாவை இன்னும் மறக்க முடியாமல் நாகசைதன்யா தவித்து வருவதாக அவர் தனது டுவிட்டரில் மறைமுகமாக கூறியுள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி நான்கு ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிய முடிவு எடுத்தனர்

ஒரே நாளில் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பிரிவதற்கான காரணத்தை கூறாமல் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு இரு தரப்பு ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்த நிலையில் நாக சைதன்யா நடித்த ’தேங்க்யூ’ என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாக உள்ளது. ராஷி கண்ணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நாகசைதன்யா மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துள்ளார்

இதற்கான புரமோஷன் பணிகளையும் அவர் கவனித்து வரும் நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அம்மா, அப்பா மற்றும் அவருடைய வளர்ப்பு நாய் ஆகிய மூன்று புகைப்படங்களை பதிவு செய்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதில் மூன்றாவது புகைப்படத்தில் உள்ள நாய், சமந்தா வளர்த்த நாய் என்பதால் அவர் சமந்தாவை மறக்க முடியாமல், மறைமுகமாக சமந்தாவின் மீதுள்ள காதலை வெளிப்படுத்தி இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.