close
Choose your channels

விக்னேஷ் சிவனுக்காக முதன்முதலில் குரல் கொடுத்த நயன்தாரா

Saturday, October 10, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த 'அய்யா' படத்தில் அறிமுகமான நயன்தாரா கடந்த பத்து வருடங்களில் ரஜினிகாந்த், விஜய், அஜீத் உள்பட பெரிய ஸ்டார்களுக்கும், சில படங்களில் புதுமுக நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10 வருடங்களாக அவர் திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தாலும் இதுவரை ஒரு தமிழ்ப்படத்தில் கூட அவர் சொந்தக்குரலில் டப்பிங் பேசியதில்லை.

ஆனால் தற்போது 'நானும் ரெளடிதான்' படத்தில் 'காதம்பரி' கேரக்டரில் நடித்திருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனின் வேண்டுகோளுக்கு இணங்க முதல்முறையாக சொந்தக்குரலில் டப்பிங் பேசியுள்ளார். இந்த தகவலை இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்ததோடு, நயன்தாராவுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். நேற்று வெளியான 'நானும் ரெளடிதான்' படத்தின் டீசரில் நயன் சொந்தக்குரலில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆர்ஜே பாலாஜி, ஆனந்த்ராஜ், 'நான்கடவுள்' ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவும் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்., தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தை லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.