close
Choose your channels

இனிமேல் இப்படித்தான்: 2 கண்டிஷன்களை போட்டாரா நயன்தாரா?

Tuesday, June 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 9ஆம் தேதி திருமணம் செய்த நிலையில் தற்போது அவர் கொச்சியில் அவரது அம்மா வீட்டில் இருக்கிறார். விரைவில் அவர் வெளிநாட்டுக்கு தேனிலவு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் திருமணத்துக்கு பின்னர் இருவருமே தாங்கள் திரையுலக பணியை தொடர உள்ளதாக தெரிவித்தனர். எனவே நயன்தாரா திருமணத்திற்கு பின்னரும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் திருமணத்திற்கு பின்னர் நடிப்பதற்கு நயன்தாரா இரண்டு கண்டிஷன்கள் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்னர் தாம் ஒப்புக்கொள்ளும் படங்களில் ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்க மாட்டேன் என்றும் தொடர்ச்சியான தேதிகளில் கால்சீட் தர மாட்டேன் என்றும் நயன்தாரா கூறியதாக தெலுங்கு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

நயன்தாரா தற்போது நடித்து ஷாருக்கானுடன் ‘ஜவான்’ என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் புதிதாக ஒப்புக்கொள்ளும் படங்களுக்கு தான் இது மேற்கண்ட இந்த இரண்டு கண்டிஷன்கள் பொருந்தும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.