close
Choose your channels

கொரோனாவுக்கு பின் கடற்கரையில் நயன்தாரா: வைரலாகும் புகைப்படங்கள்!

Sunday, November 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் சமீபத்தில் மத்திய மாநில அரசுகள் கொடுத்த அனுமதியின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏழு மாதங்களுக்குப் பின்னர் தற்போது நயன்தாரா மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் அவர் ரஜினிகாந்தின் ’அண்ணாத்த’, விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ’நெற்றிக்கண்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மலையாள படமொன்றில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்றும், பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் அவர்களுடன் 12 வருடங்களுக்கு பின்னர் நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கொச்சியில் ஆரம்பமானது. இதில் நயன்தாரா கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா கடற்கரை அருகில் நின்று கொண்டிருப்பது போலவும் அருகில் படக்குழுவினர் நிற்பது போலவும் அந்த புகைப்படத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அப்பு என் பட்டாத்திரி என்பவர் இயக்கி வருகிறார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.