close
Choose your channels

'காத்துவாக்குல ரெண்டு காதல்': ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா!

Sunday, May 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் திரையரங்கில் நயன்தாரா தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

பொதுவாக நயன்தாரா தான் நடித்த திரைப்படங்களின் புரமோஷனுக்கு வரமாட்டார் என்று கூறுவதுண்டு ஆனால் ’காத்துவாக்குல இரண்டு காதல்' திரைப்படம் தனது காதலர் இயக்கிய ஸ்பெஷல் திரைப்படம் என்பதால் இந்த படத்தின் புரமோஷனுக்கு நயன்தாரா வந்துள்ளார்.

நேற்று சென்னை தேவி திரையரங்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்கள் முன் தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். குறிப்பாக நயன்தாராவை பார்த்ததும் ரசிகர்கள் ’தலைவி’ என்றும் லேடி சூப்பர் ஸ்டார்’ என்றும் கோஷமிட்ட நிலையில் ரசிகர்களை நோக்கி கையசைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக தேவி திரையரங்கில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ வெற்றி விழா கேக்கை வெட்டிய நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கும் விஜய்சேதுபதிக்கும் கேக் ஊட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.