close
Choose your channels

விஜய் ரசிகர்களுக்கு போலீஸார் கடும் எச்சரிக்கை: களையிழந்த கொண்டாட்டம்!

Wednesday, April 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்றைய முதல் நாள் முதல் காட்சியின் போது விஜய் ரசிகர்கள் திரையரங்குகள் முன் கூடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர் .

விஜய்யின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, மாலை அணிவிப்பது போன்ற கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டிருந்த நிலையில் நெல்லையில் ’பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் கொண்டாட்டங்களுக்கு அந்நகர போலீசார் தடை விதித்துள்ளனர் .

சமீபத்தில் ’பீஸ்ட்’ படத்தின் டிரைலர் நெல்லையில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டபோது ரசிகர்களின் தாக்குதலால் அந்த திரையரங்கம் பெரும் சேதத்திற்கு உள்ளானது. இதனை அடுத்து திரையரங்குகளில் ’பீஸ்ட்’ படத்தின் கொண்டாட்டத்திற்கு தடை விதித்த நெல்லை போலீசார் கட் -அ வுட் வைக்கவும் திரையரங்குகளின் முன் வாகனங்கள் நிறுத்தவும் தடை விதித்துள்ளனர். இதனால் நெல்லையில் மட்டும் ’பீஸ்ட்’ பட கொண்டாட்டம் களையிழந்து காணப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.