close
Choose your channels

கோவை ஈஷாவில் தியானம் செய்யும் கொரோனாவில் இருந்து குணமாகிய நடிகை!

Sunday, December 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய நிக்கி கல்ராணி சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன் பின் குணமாகிய நிலையில் தற்போது கோவையில் உள்ள ஈஷா தியான மையத்திற்கு சென்று தியானம் செய்துள்ளார்

அங்குள்ள ஆதியோகி சிலை முன் நிக்கி கல்ராணி நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் தியானம் செய்யும் புகைப்படங்களும், சத்குருவுடன் எடுத்து கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனாவில் இருந்து சமீபத்தில் குணமாகிய நிலையில் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவே அவர் கோவை ஈஷா தியான மையத்திற்கு சென்று உள்ளார் என்பது கூறப்படுகிறது. நடிகை நிக்கி கல்ராணி தற்போது ’ராஜவம்சம்’ மற்றும் ’வட்டம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.