close
Choose your channels

40 நாள் ஐஷு ஒன்னுமே செய்யாததற்கு நீ தான் காரணம்.. ஆவேசமான அர்ச்சனா

Friday, November 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்க தினந்தோறும் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. அந்த வீடியோக்கள் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்று முன் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ள நிலையில் அதில் விசித்ராவிடம் நிக்சன் ஆவேசமாக வாதம் செய்கிறார். 'நான் ஐஷுவிடம் செய்தது தவறு என்றால் மணி - ரவீனா செய்வதும் தப்பு, விஷ்ணு - பூர்ணிமா செய்வதும் தப்பு' என்று கூறுகிறார்.

இதனை அடுத்து ’மரியாதையாக பேசு’ என விசித்ரா சொல்ல அதற்கு நிக்சன் ’நீங்கள் மரியாதை கொடுத்தால் தான் நானும் மரியாதை கொடுப்பேன், நீங்கள் யாராக வேணாலும் இருந்து கொள்ளுங்கள்' என்று கூறினார். ’அர்ச்சனா தவறாக செல்வதற்கு காரணமே நீங்கதான்’ என்றும் கூறுகிறார்

அப்போது அர்ச்சனா ’40 நாளு இந்த வீட்டில் ஐஷு எதுவுமே பண்ணாமல் இருந்ததற்கு காரணமே அவ நிக்சனோட இருந்தது தான் என்று கூறியதோடு, எல்லாரும் ஒரு நாள் வெளியே போகத்தான் போகிறோம், அன்னிக்கு போய் நீ ஐஸ்வர்யாவை போய் பாரு, அப்போ உனக்கு உண்மை புரியும்’ என்று கூற திடீரென நிக்சன் அமைதியாகிறார்.

மொத்தத்தில் இன்றைய பிக்பாஸ் எபிசோடு விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.