close
Choose your channels

பிரியங்காவை எதிர்க்க இங்கு யாருக்கும் தைரியம் இல்லை: தாமரையிடம் சொல்வது யார் தெரியுமா?

Tuesday, December 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த பிக்பாஸ் வீட்டில் பிரியங்காவை எதிர்க்க யாருக்கும் தைரியம் இல்லை என பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் தாமரையிடம் கூறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை பிரியங்கா ஒரு ஆளுமையுள்ள போட்டியாளராக இருந்து வருகிறார் என்றதும் அவர் தன்னைத்தானே தான் ஒரு வலிமையான போட்டியாளர் என கமல்ஹாசனிடமே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாமரை மற்றும் நிரூப் ஆகிய இருவரை தவிர பிரியங்காவுடன் இதுவரை யாரும் மோதியது கிடையாது என்பதும் அவர் சொல்வதை எதிர்த்து கூட பேசியது கூட இல்லை என்பதையும் பார்வையாளர்கள் கவனித்து வந்திருப்பார்கள்.

இந்த நிலையில் இன்று பிரியங்கா மற்றும் தாமரை ஆகிய இருவருக்கும் இடையே காரசாரமான சண்டையும் கைகலப்பு சண்டையும் நடந்த நிலையில் இந்த சண்டை குறித்து தாமரை மற்றும் நிரூப் ஆகிய இருவரும் பேசுகின்றனர்.

அப்போது நிரூப், ‘இங்கே எல்லோரும் ஏன் பிரியங்காவை எதிர்த்து பேச மாட்டேன் என்கிறார்கள் தெரியுமா? பிரியங்கா சொல்வதெல்லாம் சரி என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? பிரியங்காவுக்கு என வெளியில் ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த கூட்டத்தில் உள்ள யாராவது பிரியங்காவை பகைத்துக் கொண்டால் அவர்களுக்கு இந்த விளையாட்டில் மைனஸ் ஆகிவிடும். இந்த வீட்டில் உள்ள யாருக்கும் தைரியம் கிடையாது. பிரியங்காவை யாருமே பேச மாட்மாட்டார்கள் என்று கூறுகிறார். இதை தாமரையும் ஆமோதிப்பது போன்ற காட்சி இன்றைய அடுத்த புரமோவில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.