close
Choose your channels

சிம்பு, பிரபுதேவாவுடனான உறவு குறித்து மனம் திறந்த நயன்தாரா

Wednesday, April 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாரா என்றாலே ஒரு பக்கம் லேடி சூப்பர்ஸ்டார் என்று ஞாபகம் வந்தாலும், இன்னொரு பக்கம் சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் அவர் இருந்த ரிலேஷன்ஷிப் ஞாபகம் வரும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் அவர் காதலில் இருப்பதாகவும் ஆனால் அதன் பின்னர் பிரேக் அப் ஆகியதாகவும், அதன் பின்னர் ஒரு சில வருடங்கள் பிரபுதேவாவுடன் அவர் காதலில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு காதலை கடந்து வந்துள்ள நடிகை நயன்தாரா, சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது முந்தைய ரிலேஷன்ஷிப் குறித்து கூறுகையில், ‘நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருக்க வாய்ப்பே இல்லை என்றும், நம்ப முடியாத ஒருவருடன் உடன் இருப்பதை விட தனியாக வாழ்வதே நல்லது என்பதை நான் ஒரு சில நேரங்களில் உணர்ந்து கொண்டேன் என்றும் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து மறைமுகமாக அவர் கூறியுள்ளார்.

தற்போது நடிகை நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருப்பதாகவும் விரைவில் அவர் விக்னேஷை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. விக்னேஷ் சிவனுடனான இந்த காதல் அவருக்கு நம்பிக்கையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.