close
Choose your channels

டைட்டில் பட்டம் வென்ற அர்ச்சனாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமல்ல.. குவிந்த பரிசுகள்..!

Monday, January 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 100 நாட்களுக்கு மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முடிவுக்கு வந்தது என்பதும் நேற்றைய கிராண்ட் ஃபினாலே பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பே அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்பது சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் தெரிந்து விட்ட நிலையில் அனைவரும் எதிர்பார்த்தபடி அவருக்கு டைட்டில் வின்னர் பட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஜி ஸ்கொயர் வழங்கிய 15 லட்ச ரூபாய் நிலம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த ஒரு சீசனில் இருந்து டைட்டில் வின்னருக்கு பரிசு தொகை பணம் போக மற்ற பரிசுகள் வழங்கப்படாத நிலையில் இந்த சீசனில் புதிதாக 15 லட்ச ரூபாய் நிலம் வழங்கப்பட்டது.

அது மட்டுமின்றி மாருதி சுசுகி கார் நிறுவனம் புதிய கார் ஒன்றையும் பரிசாக அர்ச்சனாவுக்கு வழங்கியுள்ளது. இந்த காரின் மதிப்பு 10 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபோக அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20,000 சம்பளம் என்று பேசப்பட்டு இருந்ததாக கூறப்படும் நிலையில் 75 நாட்களுக்கான சம்பளத்தையும் சேர்த்தால் அவருக்கு கிட்டத்தட்ட ஒரு கோடிக்கு மேல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.