close
Choose your channels

யாரும் யாரை நம்பியும் பிறக்கவில்லை: பா ரஞ்சித் ஆவேசம்

Friday, February 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

‘அட்டக்கத்தி’ என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் கார்த்தியின் ‘மெட்ராஸ்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், இன்று நடைபெற்ற ‘நறுவி’என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர்
பேசியதாவது:

பாசிச வெறிகொண்டு இந்தியாவில் சிறுபான்மையினரைக் கொடுமைப்படுத்தும் சூழ்நிலையில் இன்று ’நறுவி’ படத்தின் விழாவில் இருக்கிறோம். இந்த படத்தின் இயக்குநர் போல தான் நானும் ’அட்டக்கத்தி’ விழாவில் பதற்றமாக இருந்தேன். ’நறுவி’ படம் பெறும் வெற்றி மூலமாக இங்குள்ளவர்கள் எல்லாம் ஸ்ட்ராங்கான ஆட்களாக மாறுவார்கள் என்று நம்புகிறேன்.

இங்கு படத்தை எடுப்பதை விட வெளியிடுவது தான் ரொம்ப கஷ்டம். அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி இந்தப்படம் வெற்றியடையணும். இங்கு யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லை. அவரவரின் தனித்தனி முயற்சி அவரவர்களுக்கான அடையாளத்தைத் தரும். இந்தப்படத்தில் உள்ள விஷுவல்ஸ் எல்லாம் நல்லாருக்கு. தகுதியான படத்தை தமிழ்சினிமா ரசிகர்கள் கை விடுவதே இல்லை. ஊடகமும் நல்ல படத்தைக் கொண்டாடியே தீருவார்கள். இந்த படம் பெரிதாக வெற்றிபெற வாழ்த்துகிறேன்” இவ்வாறு இயக்குனர் பா.ரஞ்சித் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.